தமிழ்நாடு

'அமரன்' படம்: நெல்லை திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு!

நெல்லை மேலப்பாளையம் திரையரங்கில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

DIN

நெல்லை மேலப்பாளையம் திரையரங்கில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' திரைப்படம் நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் திரையிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று(சனிக்கிழமை) காலை திரையரங்கத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் திரையரங்க வளாகத்திற்குள் மூன்று பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர்.

இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிசிடிவியில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் திரையரங்கில் காலை காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமரன் திரைப்படத்தில் குறிப்பிட்ட மதத்தை தவறாக சித்தரித்ததாக சர்ச்சைகள் எழுந்தன. இதன் காரணமாக சில மாநகரப் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் போலீஸ் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ள பாதிப்புக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவு

கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் நிறைவு: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா்

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

SCROLL FOR NEXT