தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிலும் குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் ஒரு வாரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சற்று முன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் இன்றிலிருந்து 9 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
வரும் 27-ஆம் தேதி வரை, காலை வேளையில் பனிப்பொழிவு இருக்கும் என்றும், குளிர்கால சீதோஷ்ணம் நிலவும் என்றும் தெரிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் அடுத்த ஓரிரு நாள்கள் ஈரப்பதத்துடன் கூடிய காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.