சென்னை: தமிழகத்தில் 399 வழித்தடங்களில் புதிதாக பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பொதுமக்களுக்கும், அரசுப் பேருந்து சேவை கிடைக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, மகளிா், மாணவா்கள் என பலதரப்பட்டவா்களும் பயன்பெறும் வகையில், 399 புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், 617 நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. மாணவா்களின் கட்டணமில்லா பயணத்துக்காக ரூ.5,328 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 2,578 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ள நிலையில், 1,310 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.