முகப்பு
தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கையும்களவுமாக சிக்கிய வருவாய் ஆய்வாளர்!

வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் வருவாய் ஆய்வாளர் கையும்களவுமாக சிக்கியுள்ளார்.

Updated On : 27 நவம்பர் 2024, 3:56 pm IST
வருவாய் ஆய்வாளர் கார்த்தி
பகிர்:

வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் வருவாய் ஆய்வாளர் கையும்களவுமாக சிக்கியுள்ளார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்நிலை வருவாய் ஆய்வாளராக கார்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார்.

வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உள்பட்ட பெரிய கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்பவர் ஓடைப் பகுதி ஆக்கிரமிப்பை எடுக்க வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த மனுவின் அடிப்படையில் ஓடைப் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற யோகேஸ்வரனிடம் வருவாய் ஆய்வாளர் கார்த்திக்கின் உதவியாளர் முருகன் மணியின் மூலம் 15,000 ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார்.

லஞ்சம் வாங்கும்போது சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளர் முருகன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர், வருவாய் ஆய்வாளரை கையும்களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.