மழை நிலவரம் 
தமிழ்நாடு

கோவையில் டிச. 1 - 3ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை

கோவை மற்றும் நீலகிரியில் டிசம்பர் 1 - 3ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை

DIN

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஃபெங்ஜால் புயல் கரையைக் கடக்கும் நிலையில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழையும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் நாளை முதல் மூன்றாம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி மாவட்டத்திலும் கனமழை மற்றும் அதனால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஃபெங்ஜால் புயல் கரையைக் கடந்ததும், ஞாயிற்றுக்கிழமை காலை முதல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்கள் வழியாக திங்கள்கிழமை வரை பயணிக்கும் என்பதால், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT