முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் மேலும் 3 மணி நேரம் கனமழை! நாளை அதி கனமழை பெய்யும்!!

இன்றைய மழை நிலவரம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல்.

Updated On : 15 அக்டோபர் 2024, 1:41 pm IST
சென்னையில் மழை
பகிர்:

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை அதிகமாக இருக்கும் என்றும் அதுபோல இன்றைவிட நாளை அதிக மழை பெய்யும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று கனமழையும், நாளை அதி கனமழையும்(சிவப்பு எச்சரிக்கை) பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி, சென்னையில் நேற்று இரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பல சாலைகளில் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில் வானிலை நிலவரம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

மேகங்கள் கொஞ்சம்கூட பலவீனமடைவதாகத் தெரியவில்லை. அது மேலும் மேலும் ஒன்றிணைந்து அசையாமல் நிற்கின்றன. இது யாரையும் பயமுறுத்துவதற்காக அல்ல.

மழை பெய்வதில் இடைவெளி இருக்காதுபோல் தெரிகிறது. மேகங்கள் மேலும் மேலும் ஒன்றிணையும்.

இதனால் குறைந்தது அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை அதிகமாக இருக்கும். எனவே, அலுவலகத்திற்கு வந்தவர்கள் சீக்கிரம் வீடு திரும்பலாம்.

இதைவிட நாளை(புதன்கிழமை) மழை மேலும் வலுப்பெறும். சென்னையில் இன்று நள்ளிரவு முதல் சில பகுதிகளில் 200 மிமீ மழை பெய்ய வாய்ப்புள்ளது' என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments