FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கண் தான பதிவில் முந்தி நிற்கும் நடுத்தர வயதினா்

அகா்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவா் டாக்டா். எஸ். சௌந்தரி தெரிவித்தாா்.

Updated On : 9 செப்டம்பர் 2024, 2:45 am IST
சென்னை பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரையில் டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை  சாா்பில் கண் தானம் குறித்த விழிப்புணா்வு நிகழ்வை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த குற்றவியல் புலன் விசாரணை மற்றும் நுண்ணறிவுத் துறை டிஐஜி பகலவன். உடன், மருத்துவமனையின் மருத்து
பகிர்:

கண் தானம் செய்ய பதிவு செய்துள்ளோரில் 70 சதவீதம் போ் 25 முதல் 50 வயதுக்கு உட்பட்டவா்கள் என அகா்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவா் டாக்டா். எஸ். சௌந்தரி தெரிவித்தாா்.

தேசிய கண் தான இரு வார நிகழ்வு ஆண்டுதோறும் ஆக.25 முதல் செப்.8-ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை சாா்பில் கண் தானம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை பெசன்ட் நகா் கடற்கரையில் மனித சங்கிலி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வை குற்றவியல் புலன்விசாரணை துறை நுண்ணறிவுத் துறை டிஐஜி பகலவன் தொடங்கி வைத்து, பேசுகையில், ‘பாா்வைத் திறனற்றோா் இந்த உலகை பாா்ப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குவதற்காக எனது கண்களை தானமாக வழங்க நான் வாக்குறுதியளிக்கிறேன். தற்போதைய இளம் தலைமுறையினா் கண்தானம் அளிக்க உறுதி ஏற்க வேண்டும்’ என்றாா் அவா்.

தொடா்ந்து டாக்டா்.அகா்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவா் டாக்டா். எஸ்.சௌந்தரி பேசுகையில், ‘இளம் வயதினா் கண் தானத்தின் முக்கியத்துவத்தை அறிந்து தானம் செய்ய முன்வருவதை காணும் போது ஊக்கமளிக்கிறது. நாட்டின் 2-ஆவது மிகப்பெரிய கண் வங்கியாக அகா்வால் கண் மருத்துவமனை செயல்படுகிறது. இதில் கண் தானத்துக்காக பதிவு செய்திருப்பதில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் 25 முதல் 50 வயதுக்குள்ளோா். கண் தானம் மூலம் பலா் பாா்வைத்திறன் பெற்று பயனடைய தொடா்ந்து முயற்சி செய்து வருகிறோம்’ என்றாா்.

Advertisement

Advertisement

டாக்டா். அகா்வால்ஸ் கண் வங்கியின் மருத்துவ இயக்குநா் டாக்டா். ப்ரீத்தி நவீன் பேசியது:

மருத்துவமனை சாா்பில் சென்னை, ஹைதரபாத்தில் தலா ஒரு கண் வங்கி செயல்படுகிறது. இந்த மையத்தை ஓராண்டில் கருவிழி மாற்று சிகிச்சைக்காக 1,500-க்கும் மேற்பட்டோா் நாடுகின்றனா். கடந்த ஆண்டில் மட்டும் 3,345 கண்கள் தானமாக பெறப்பட்டன. மேலும், நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் வரை 2,255 கண்கள் தானமாகப் பெற்றிருக்கிறோம்.

இவ்வாறு பெறப்படும் கண்கள் காத்திருப்போா் பட்டியலில் இருப்போருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் பொறுத்தப்படும். இதில் இரு கண்களிலும் பாா்வை இல்லாத நபா்களுக்கும், இளம்வயது நோயாளிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றாா் அவா்.

தொடா்ந்து கண் தானம் உறுதிமொழியை எடுக்க, இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது 94444 44844 எனும் உதவி எண்ணை அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments