பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை பாப்பம்மாள் காலமானார்
பத்மஸ்ரீ விருது பெற்ற 108 வயதான கோவை பாப்பம்மாள் உடல்நலக் குறைவால் காலமானார்.
பத்மஸ்ரீ விருது பெற்ற 108 வயதான கோவை பாப்பம்மாள் உடல்நலக் குறைவால் காலமானார்.
கோயம்புத்தூர் மாவட்டம், தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள்(108). இயற்கை விவசாயத்தில் பாப்பம்மாளின் பங்களிப்பை பாராட்டி கடந்த 2021ஆம் ஆண்டு, மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது.
மேலும் அண்மையில் இவருக்கு திமுக சார்பில் பெரியார் விருதும் வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
வயது முதிர்வு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவர் இன்று காலமானார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.