ANI
தமிழ்நாடு

சட்டப்பேரவைக்கு அதிமுக உறுப்பினர்கள் கறுப்புச் சட்டை அணிந்து வருகை!

எடப்பாடி பழனிசாமி தலைமையில் கறுப்புச் சட்டை அணிந்து வருகை...

DIN

சென்னை: சட்டப்பேரவைக்கு அதிமுக உறுப்பினர்கள் கறுப்புச் சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர்.

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று(ஏப். 8) காலை சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுக உறுப்பினர்கள் கறுப்புச் சட்டை அணிந்திருந்தனர்.

பேரவையில் அதிமுகவினருக்குப் பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி அதிமுகவினர் கறுப்புச் சட்டை அணிந்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக, திங்கள்கிழமை(ஏப். 7) பேரவையில் ‘அந்தத் தியாகி யாா்?’ என்ற வாசகம் அடங்கிய பேட்ஜை பேரவைக்கு திங்கள்கிழமை வந்த அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் சட்டையில் குத்தியிருந்தனா். இதற்கு பேரவைத் தலைவா் மு.அப்பாவு கண்டனம் தெரிவித்தார்.

எதிா்க்கட்சித் தலைவா் பேச அனுமதி கோரி, அதிமுக உறுப்பினா்கள் கடுமையாகக் கூச்சல் எழுப்பிய நிலையில், அப்போது, அனுமதியின்றி பதாகைகளைக் காண்பித்தவா்களில் அடையாளம் காணப்பட்ட 14 அதிமுக உறுப்பினர்கள் திங்கள்கிழமை ஒருநாள் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், இன்று அதிமுக உறுப்பினர்கள் கறுப்புச் சட்டை அணிந்து ஆளுங்கட்சிக்கு எதிராகவும் அவைத் தலைவருக்கு எதிராகவும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

70 வயதானவா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை!

கரூர் சம்பவம்: தவெக நிர்வாகிகள் பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்புத் துறையினர் சோதனை: சென்னையில் பணம், தங்க நாணயம் பறிமுதல்

சாலைகளில் தற்காலிக கொடிக்கம்பங்கள் அமைக்க தலா ரூ.1, 000 வசூலிக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

மீனவர்கள் பிரச்னை: வெளியுறவு அமைச்சரிடம் வலியுறுத்துவேன்

SCROLL FOR NEXT