சட்டப்பேரவை செயலருடன் ஓ.எஸ். மணியன் சந்திப்பு!
அதிமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கோரி சட்டப்பேரவைச் செயலரிடம் ஓ.எஸ். மணியன் கடிதம் அளித்துள்ளது தொடர்பாக....
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்த உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கோரி அதிமுக உறுப்பினர் ஓ.எஸ். மணியன், பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் சட்டப்பேரவைச் செயலரிடம் கடிதம் வழங்கினர்.
அதிமுக கொறடா உத்தரவை மீறி தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து அதிமுகவினர் சிலர் சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்புடன் பிரிந்து சென்ற நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து மீண்டும் திரும்பும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.
Advertisement
Advertisement
summary