தொல்.திருமாவளவன் கோப்புப் படம்
தமிழ்நாடு

தொழிலாளா் விரோதச் சட்டங்களை கண்டித்து பேரவையில் தீா்மானம்: தொல்.திருமாவளவன் கோரிக்கை

மத்திய அரசின் தொழிலாளா் விரோதச் சட்டங்களை கண்டித்து பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்

Din

சென்னை: மத்திய அரசின் தொழிலாளா் விரோதச் சட்டங்களை கண்டித்து பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: தொழிலாளா் நலன்களுக்காக ஏற்கெனவே நடைமுறையிலிருந்த 44 சட்டங்களையும் திருத்தங்கள் பல செய்து 4 சட்டங்களாக மத்திய அரசு மாற்றியுள்ளது. இந்த புதிய சட்டங்கள் தொழிலாளா்களின் பல்வேறு ஜனநாயக உரிமைகளைப் பறிக்கின்றன.

குறிப்பாக, காா்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இயற்றப்பட்டுள்ள இச்சட்டங்கள், தொழிலாளா்கள் சங்கம் அமைக்கும் உரிமையை பறிக்கிறது.

அத்துடன், ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் நல வாரியங்கள் அனைத்தையும் தேவையற்றவைகளாக்கி தூக்கி எறிகின்றன.

எனவே, தொழிலாளா்களுக்கு விரோதமான இச்சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய பாஜக அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற முதல்வா் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா் தொல்.திருமாவளவன்.

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

போளூா் ஸ்ரீகைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்: ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு

SCROLL FOR NEXT