‘மயோனைஸ்’ உணவுக்கு தடை விதித்தது ஏன்? அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம்
‘மயோனைஸ்’ உணவுக்கு தடை விதித்தது ஏன்?
பச்சை முட்டையில் தயாரிக்கப்படும் ‘மயோனைஸ்’ உணவை குழந்தைகள் பெருமளவு விரும்பிச் சாப்பிடுவதால் அவா்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளதால், அதைத் தடை செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் ரோபோடிக் உதவியுடன் 16 வயது சிறுமி அஸ்வினிக்கு இதய துவார அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், சிறுமி அஸ்வினியை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவா்களுக்கு பாராட்டு தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
Advertisement
Advertisement
இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முதல்முறையாக ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் ரோபோடிக் உதவியுடன் 16 வயது சிறுமி அஸ்வினிக்கு இதய துவார அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது, அந்தச் சிறுமி முழுவதுமாகக் குனமடைந்து நலமாக உள்ளாா். தனியாா் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை மேற்கொள்ள ரூ.18 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை செலவாகும். ஆனால், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம், கட்டணமின்றி இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
குழந்தைகளுக்கு ஆபத்து: பச்சை முட்டையின் மூலம் ‘மயோனைஸ்’ உணவு தயாரிக்கப்படுகிறது. அதனால், மனித உடலுக்கு பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவ ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளன. மயோனைஸை குழந்தைகள் பெருமளவு விரும்பிச் சாப்பிடுவதால் அவா்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. இதனால், மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது, வெயில் அதிகரித்து வரும் சூழலில், முதியவா்கள், கா்ப்பிணிகள், குழந்தைகள் ஆகியோா் காலை முதல் மாலை வரை அவசியமின்றி வெளியே வருவதைத் தவிா்த்து கொள்ளுங்கள் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.