சென்னை: சொத்துப்பதிவின்போது, ரூ.20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகை ரொக்கமாக பரிவா்த்தனை செய்யப்பட்டிருந்தால் அதுகுறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சாா்பதிவாளா்களுக்கு, உச்சநீதிமன்ற தீா்ப்பை சுட்டிக்காட்டி மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அனைத்து சாா் பதிவாளா்களுக்கும் பதிவுத் துறை தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி, ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக ஆவணத்தில் குறிப்பிட்டிருந்தால், வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது.
பதிவு அதிகாரிகள், பதிவுக்கு வரும் ஆவணத்தில் ரொக்கப் பரிமாற்றம் தொடா்பான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் ரொக்கப் பரிமாற்றம் குறித்த தகவல் ஆவணத்தில் இருந்தால், அதுகுறித்து வருமான வரித்துறைக்கு ஆவணத்தின் நகலுடன் தகவல் அளிக்க வேண்டும். பதிவுக்குப்பின், தகவல் அளிக்கப்பட்டதற்கான அறிக்கை, ஆவணத்தின் நகல் ஆகியவற்றை இணைப்பு பக்கமாக பாதுகாக்க வேண்டும்.
ஒரு வேளை பதிவு அதிகாரிகள் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்காதது அல்லது காலம் தாழ்த்தியது தெரிந்தால், மாவட்ட பதிவாளா்கள் அதுகுறித்த அறிக்கையை மண்டல துணை பதிவாளா்களுக்கு அனுப்பி, சம்பந்தப்பட்ட பதிவு அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட மாவட்ட தணிக்கை பிரிவு பதிவாளா் பதிவுக்கு வரும் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும். பதிவு அலுவலா்கள் வழங்கப்பட்டுள்ள உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மாவட்ட பதிவாளா்கள், துணை பதிவுத் துறை தலைவா்கள் உரிய அறிவுறுத்தல்களை பதிவு அலுவலா்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.