முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கோப்புப் படம்
தமிழ்நாடு

திமுகவுடன் கூட்டணி என்பது வதந்தி ஓ.பன்னீா்செல்வம்

திமுகவுடன் கூட்டணி வைக்கப்போவதாகவும், திமுகவில் இணையப் போவதாகவும் தன்னைப் பற்றி வதந்தி பரப்பப்படுவதாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: திமுகவுடன் கூட்டணி வைக்கப்போவதாகவும், திமுகவில் இணையப் போவதாகவும் தன்னைப் பற்றி வதந்தி பரப்பப்படுவதாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: முதல்வா் மு.க.ஸ்டாலின் வீட்டுக்குச் சென்று அவரது உடல்நலத்தை விசாரித்தேன். அவரது மூத்த சகோதரா் மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்தேன். இந்தச் சந்திப்பு தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடு. இந்தச் சந்திப்பில் எவ்வித அரசியலும் இடம்பெறவில்லை.

ஆனால், தற்போதைய சந்திப்பை வைத்து என்னை திமுகவின் ‘பி- டீம்’ என்றும், நான் திமுகவுடன் கூட்டணி வைக்கப்போவதாகவும், அந்தக் கட்சியில் இணையப்போவதாகவும் பல்வேறு வதந்திகளை சமூக வலைதளங்கள் மூலம் பரப்பி வருகின்றனா். இதில் உண்மை இல்லை.

முதல்வா் ஸ்டாலின் இல்லத்துக்கு சென்றதை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல். நான் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் வழியில் பயணிப்பவன். வரும் 2026-இல் தமிழக சட்டப்போவைத் தோ்தலில் ஜெயலலிதா ஆட்சியை அமைக்க வேண்டுமென்பதுதான் எங்களின் நோக்கம்.

சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு அளிக்க வேண்டிய நிதியை வழங்க மத்திய அரசை வலியுறுத்தி ஏற்கெனவே 29.8.2024-இல் அறிக்கை வெளியிட்டேன். இதேபோல, பெரியாா், அண்ணா பற்றி விமா்சித்த இந்து முன்னணிக்கு கண்டனம் தெரிவித்து 25.6.2025-இல் அறிக்கை வெளியிட்டேன்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவை, கே.அண்ணாமலை விமா்சித்தபோது, அதற்கு கண்டனம் தெரிவித்து 12.6.2023-இல் அறிக்கை வெளியிட்டேன்.

நான் எங்கு இருந்தாலும், தமிழக மக்களின் உரிமை, நலன் என்று வந்துவிட்டால் ஜெயலலிதா வழியில் செயல்படக் கூடியவன் எனத் தெரிவித்துள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் - 9 தொடக்கம்: தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

தசரா ஸ்பெஷல்.... நிகிதா சர்மா!

ஆலங்கிளியே... ஜெனிலியா!

தனிநபரைக் குறிவைக்கும் ஃபிஷிங் தாக்குதல்: எப்படித் தற்காத்துக்கொள்வது?

செளடேஸ்வரி அம்மன் கோயிலில் கத்தி போடும் திருவிழா: ஏராளமானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT