முகப்பு
தமிழ்நாடு

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு!

13-ஆம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகும் என எதிர்பார்ப்பு..

Updated On : 11 ஆகஸ்ட், 2025 at 8:42 AM
வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு
பகிர்:

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதையடுத்து வருகின்ற 13 - ஆம் தேதி வாக்கில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (ஆகஸ்ட் 11) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

summary

The Meteorological Department has stated that a low pressure area is likely to form over the northwest and adjacent central-west Bay of Bengal.

முழு கட்டுரையைப் படிக்க →