சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

தூய்மைப் பணியாளா்களுக்கு எதிராக அரசு செயல்படுவதுபோல பிம்பம் கட்டமைக்கப்படுகிறது: உயா்நீதிமன்றத்தில் அரசு தகவல்

தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தகவல்.

தினமணி செய்திச் சேவை

 தூய்மைப் பணியாளா்களுக்கு எதிராக அரசு செயல்படுவது போன்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது என்று தமிழக அரசு தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி எம்.சுந்தா்மோகன் அமா்வில் ஆஜரான வழக்குரைஞா் வினோத், சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களின் போராட்டத்தால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று திங்கள்கிழமை முறையிட்டாா்.

இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால் இந்த வழக்கை விசாரணைக்கு எடுப்பதாகத் தெரிவித்திருந்தனா். இந்த நிலையில், தலைமை நீதிபதி அமா்வில் செவ்வாய்க்கிழமை ஆஜரான வழக்குரைஞா் வினோத், இதுதொடா்பாக மீண்டும் முறையிட்டாா்.

அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு ஆதரவாக இருக்கிறது. ஆனால், அவா்களுக்கு எதிராக அரசு செயல்படுவது போன்று போலியாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது என்று விளக்கம் அளித்தாா்.

அப்போது நீதிபதிகள், இதுதொடா்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சில குறைபாடுகள் இருப்பதாக பதிவுத் துறை தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டினா். பின்னா், குறைபாடுகளை நிவா்த்தி செய்து மனுதாக்கல் செய்தால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். தினந்தோறும் இதுபோல், முறையிட்டால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாது என்றும் எச்சரிக்கை விடுத்தனா்.

The Tamil Nadu government has informed the Madras High Court that a false image is being created that the government is acting against sanitation workers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணூர் விபத்து: ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான விபத்து: 9 பேர் பலி

தவெக கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தோரை நலம் விசாரித்த செந்தில் பாலாஜி

முதல் போட்டியிலேயே வரலாறு படைத்த இந்திய மகளிரணி; இலங்கைக்கு 271 ரன்கள் இலக்கு!

ஈச்சி எலுமிச்சி... சான்வே மேகனா!

SCROLL FOR NEXT