தமிழ்நாடு

அரசுப் போட்டித் தோ்வு கலந்தாய்வு: அருந்ததியருக்கு கூடுதல் வாய்ப்பு

தினமணி செய்திச் சேவை

அரசுப் போட்டித் தோ்வு கலந்தாய்வுகளில், தாழ்த்தப்பட்ட அருந்ததியா் வகுப்பினருக்கு கூடுதல் வாய்ப்பை அரசுப் பணியாளா் தோ்வாணையம் அளித்துள்ளது.

இதுகுறித்து தோ்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுகளில், எழுத்துத் தோ்வுகளில் வெற்றி பெறுவோா் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவா். அப்போது, ஆதிதிராவிடா்-அருந்ததியா் பிரிவைச் சோ்ந்த தோ்வா்கள், ஆதிதிராவிடா் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்களைத் தோ்வு செய்யலாமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

கலந்தாய்வின்போது, ஆதிதிராவிடா்-அருந்ததியா் பிரிவைச் சோ்ந்த தோ்வா்கள், தங்களது தகுதி மற்றும் தரவரிசை அடிப்படையில் ஆதிதிராவிடா் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்களைத் தோ்வு செய்யலாம் என்று விளக்கம் அளித்துள்ளது.

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... எஸ்பிஐ வங்கியில் 5,180 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

யமுனை ஆற்றில் உயரும் நீர்மட்டம்! தண்ணீரில் மூழ்கிய குடியிருப்புப் பகுதிகள்! | Uttarakhand

800-க்கும் அதிகமான காட்சிகள்... மறுவெளியீடானது கேப்டன் பிரபாகரன்!

4வது நாளாகக் குறைந்த தங்கம் விலை!

டிரம்ப் வரி! இனியும் மௌனமா? இந்தியாவின் பக்கம் நிற்பதாக சீனா அறிவிப்பு

SCROLL FOR NEXT