கனமழை எதிரொலி: அண்ணா, சென்னை பல்கலை. தேர்வுகள் சென்னை கல்லூரிகளில் ஒத்திவைப்பு!
கனமழையால் அண்ணா பல்கலை., சென்னை பல்கலை. தேர்வுகள் சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒத்திவைப்பு
கனமழையால் அண்ணா, சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகள் சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாளை(டிச. 3) திட்டமிடப்பட்டிருந்த அண்ணா பல்கலைக்கழகப் பருவத் தேர்வுகள், சென்னை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, சென்னை பல்கலைக்கழகத்திலும் அதன் உறுப்பு கல்லூரிகளில் நாளை(டிச. 3) திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
summary