முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 
தமிழ்நாடு

செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ்!

செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.

ஓபிஎஸ் - இபிஎஸ் பிரிந்துள்ள நிலையில், கட்சி ஒருங்கிணைப்பு குறித்து பேசியதுடன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை சந்தித்ததால் அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் கோபிசெட்டிபாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

இந்த நிலையில், செங்கோட்டையன் வீட்டுக்கு தமிழக காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய ஆயுதப் படை போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இதையடுத்து வட இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பவுன்சர்கள் அவரின் வீட்டுக்கு பாதுகாப்புப் பணிக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Police protection granted to Sengottaiyan withdrawn

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டாவது நாளாக முடங்கிய மக்களவை!

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு!

சீரியல் கில்லராக மம்மூட்டி? களம் காவல் வெளியீட்டு டீசர்!

2025ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தை! ஆக்ஸ்ஃபோர்டு வெளியிட்ட அறிவிப்பு

பாரிமுனையில் அதிகபட்சமாக 254 மி.மீ. மழை பதிவு!

SCROLL FOR NEXT