திருப்பரங்குன்ற தீப விவகாரம்! நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு ஆதரவாக 36 முன்னாள் நீதிபதிகள்!
நீதிபதி சுவாமிநாதனை பதவிநீக்க முயற்சிக்கும் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களின் நடவடிக்கைக்கு 36 முன்னாள் நீதிபதிகள் கண்டனம்
திருப்பரங்குன்ற தீப விவகாரம் : திருப்பரங்குன்ற தீப விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு ஆதரவளிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 36 முன்னாள் நீதிபதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்றுவது தொடர்பான விவகாரத்தில் உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்ய எதிர்க்கட்சி எம்.பி.க்களின் நடவடிக்கையைக் கண்டிக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட மக்களுக்கும் 36 முன்னாள் நீதிபதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
நீதிபதி மீதான பதவிநீக்க முயற்சி அனுமதிக்கப்பட்டால், அது ஜனநாயகத்தின் வேர்களையும் நீதித் துறையின் சுதந்திரத்தையும் வெட்டி விடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி
36 ex-judges slam Opposition move to impeach Justice Swaminathan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.