எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சனிக்கிழமையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுற்றி வளைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, படகை பறிமுதல் செய்ததுடன், மீனவர்களைக் கைதும் செய்தனர் இதனையடுத்து, காங்கேசன் கடற்படை முகாமுக்கு மீனவர்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதாகவும், தொடர்ந்து யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் மீனவர்களை ஒப்படைக்கவிருப்பதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்குமாறு அவர்களின் குடும்பத்தினரும் மீனவ அமைப்புகளும் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.