ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி: அரசு அறிவிப்பு
1972 முதல் 2003 வரையிலான கல்விக் கடன் தள்ளுபடி
Updated On : 3 பிப்ரவரி, 2025 at 7:48 PM
சென்னை : ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் ஆகிய சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
Updated On : 3 பிப்ரவரி, 2025 at 7:49 PM
பள்ளிப்படிப்புக்குப்பின் உயர்கல்வி பயில மேற்கண்ட சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் 1972 முதல் 2003 வரையிலான காலகட்டத்தில், பெற்றிருந்த ரூ.48.95 கோடி கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated On : 3 பிப்ரவரி, 2025 at 7:52 PM
கல்விக்கடன் நிலுவைத் தொகையை பல்வேறு காரணங்களால் மாணவர்களிடமிருந்து வசூலிக்க இயலாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Advertisement