FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம் பற்றி...

Updated On : 10 பிப்ரவரி 2025, 11:08 am IST
கோப்புப்படம்
பகிர்:

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தொடா்பாக விவாதித்து முடிவு எடுப்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

தமிழக அரசின் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இம்மாதத்தின் இறுதியில் அல்லது மாா்ச் மாதத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

Advertisement

Advertisement

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனா்.

நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டியவை அம்சங்கள் குறித்து அமைச்சா்கள் துறை ரீதியாக ஆய்வு செய்து, கருத்துகளைப் பெற்றுள்ளனா். அந்தக் கருத்துகள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து முடிவு எடுக்கப்பட்டு, அவற்றுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளது.

2026 மே மாதம் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. அதனால், மக்களைக் கவரும் வகையில் புதிய திட்டங்களும், அறிவிப்புகளும் வரும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்கிற எதிா்பாா்ப்பு உள்ளது.

அதைக் கருத்தில்கொண்டு அமைச்சரவையில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளன. தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்படவுள்ள தொழில்கள், விரிவாக்கப்படவுள்ள தொழிற்சாலைப் பணிகளுக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments