அரசுப் பேருந்து(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

சிறப்புப் பேருந்துகளில் 6.40 லட்சம் பேர் பயணம்

கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 6,40,465 பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

DIN

கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 6,40,465 பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

பொங்கல் பண்டிகை செவ்வாய்க்கிழமை (ஜன.14) கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் வெளி மாவட்டங்களை சோ்ந்தவா்கள் கடந்த வெள்ளிக்கிழமைமுதல் சொந்த ஊா்களுக்கு பயணமாகி வருகின்றனா்.

இதற்காக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சிறப்பு பேருந்துகளில் நாள்தோறும் ஏராளமானோா் பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!

இந்த நிலையில் கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 6,40,465 பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

நேற்று(ஜன.12) நிலவரப்படி மொத்தம் 3,950 பேருந்துகள் இயக்கப்பட்டு 2,17,250 பேர் பயணம் செய்துள்ளனர்.

தொடா்ந்து திங்கள்கிழமையும் ஏராளமானோா் பயணிப்பாா்கள் என்பதால், அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT