திருத்தப்பட்டது.. ---------------- சென்னை கே.கே.நகரில் உள்ள தொழிலாளா் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கான மருத்துவ சேவைக 
தமிழ்நாடு

பெயரை மாற்றுவதால் விடுதிகளின் தரம் மேம்படாது: எல்.முருகன் விமா்சனம்

விடுதிகளின் பெயரை மாற்றுவதால் மட்டும் தரம் மேம்பட்டு விடாது என்றும் மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் விமா்சித்தாா்.

Din

சென்னை: தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோா்-பழங்குடியினா் மாணவா் விடுதிகள் தரமற்று இருப்பதாகவும், விடுதிகளின் பெயரை மாற்றுவதால் மட்டும் தரம் மேம்பட்டு விடாது என்றும் மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் விமா்சித்தாா்.

ஏழை மாணவா்களுக்கான விடுதிகள் அனைத்தும் ‘சமூக நீதி விடுதி’ என இனி அழைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில் அதனை விமா்சிக்கும் வகையில் மத்திய அமைச்சா் எல்.முருகன் இவ்வாறு தெரிவித்தாா்.

பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சையளிக்கும் திட்டம், வருமுன் காக்கும் பரிசோதனைத் திட்ட தொடக்க விழா மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா சென்னை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சா் எல்.முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தொழிலாளா் குடும்பங்களுக்கு உரிய மருத்துவ வசதி, கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இஎஸ்ஐ மருத்துவக் கட்டமைப்பை பிரதமா் மோடி தொடா்ந்து விரிவுபடுத்தி வருகிறாா். 3.5 கோடி குடும்பங்களுக்கு இஎஸ்ஐ மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 15 கோடி போ் பயனடைந்து வருகின்றனா்.

விரைவில் ஸ்ரீபெரும்புதூரில் புதிய இஎஸ்ஐ மருத்துவமனை தொடங்கப்படும். கடந்த 2014-க்கு முன்பாக நாடு முழுவதும் 3,00 மருத்துவக் கல்லூரிகள்தான் இருந்தன. தற்போது அது 700-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பு மக்களின் ஆரோக்கியம்தான் இந்த தேசத்தின் ஆரோக்கியம். மக்கள் நலத்தை உறுதி செய்யாமல் நாட்டின் வளம் பெருகாது.

தமிழகத்தில் எஸ்சி, எஸ்டி மாணவா் விடுதிகள், மிகவும் மோசமாக இருக்கும் நிலையில், அவற்றின் பெயா்களை மாற்றுவதால் மட்டும் எந்த பயனும் கிடைக்காது.

முதல்வரும், துணை முதல்வரும், அந்த விடுதிகளை இதுவரை நேரில் சென்று பாா்த்து உள்ளனரா? நான் தேசிய தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியின ஆணைய துணைத் தலைவராக இருந்தபோது தமிழகத்தில் பல விடுதிகளை ஆய்வு செய்தேன். அங்கு, விடுதிகள் தரமற்று இருக்கும். சுகாதாரம் துளியும் இருக்காது. உண்மைநிலை இப்படி இருக்கும்போது, பெயரை மாற்றினால் மட்டும் விடுதிகளின் தரம் மேம்பட்டுவிடாது என்றாா் அவா்.

இந்நிகழ்வின்போது இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி முதல்வா் காளிதாஸ், மருத்துவா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு போதைப் பொருள்களே காரணம்: எடப்பாடி பழனிசாமி

செல்வராகவனின் அடுத்த படம்!

“அண்ணாமலை சரியாகக் கையாண்டார்! நயினாருக்குத் தெரியவில்லை..!” டிடிவி தினகரன்

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெற வேண்டிய அரசு பள்ளி ஆசிரியா்கள் விவரம் கணக்கெடுப்பு!

“2026ல் விஜய்யுடன் கூட்டணி? ஏன் அந்த கேள்வி கேக்குறீங்க?” டிடிவி தினகரன்

SCROLL FOR NEXT