ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த ரசூல். அதைத்தொடர்ந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த ரசூல்.  
தமிழ்நாடு

அரசுப் பணி தேர்வில் குளறுபடி: திருவள்ளூர் ஆட்சியரகத்தில் தீக்குளிக்க முயற்சித்த இளைஞரால் பரபரப்பு

அரசுப்பணி தேர்வு எழுதியதில் குளறுபடியால் பாதித்த இளைஞர் ஆட்சியர் அலுவலகத்தில் தனது மனைவி, குழந்தைகளுடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திச் சேவை

அரசுப்பணி தேர்வு எழுதியதில் குளறுபடியால் பாதித்த இளைஞர் ஆட்சியர் அலுவலகத்தில் தனது மனைவி, குழந்தைகளுடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சீனிவாசபுரம் முஸ்லிம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரசூல் (32). இந்த நிலையில் ரசூல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நகல் பரிசோதகர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு தேர்வு எழுதினார். கடந்த மார்ச் 17 அன்று அவருக்கு நேர்முகத்தேர்வு நடைபெற்று.

அதில் அவர் தேர்வு பெற்றார். கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி அன்று அவருக்கு தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு இதுநாள் வரையிலும் பணி வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அவர் சென்னையில் சென்று உயர்நீதிமன்ற பதிவாளரை சந்தித்து கேட்டபோது அவர் நேர்முக தேர்வுக்கு வரவில்லை என்று கூறினார்கள்.

ஆபரேஷன் சிந்தூர்: மாநிலங்களவையில் கார்கே - நட்டா காரசார வாதம்!

இதனால் மனவேதனை அடைந்த நிலையில் அவர்களிடம் கேட்டபோது சரியான பதில் தரவில்லை. இதைத்தொடர்ந்து திங்கள்கிழமை ரசூல் தனது மனைவி ஜெய்னாப் ( 26) மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தனக்கு பணி வழங்கப்படாததைக் கண்டித்து திடீரென பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியரிடம் அழைத்துச்சென்றனர். அதையடுத்து ஆட்சியர் மு.பிரதாப்பிடம் கோரிக்கை மனுவை அளித்தார். உடனே மனுவை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

A commotion prevailed after a young man attempted self-immolation at the Tiruvallur District Collector Office.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க கூடுதல் வாகனங்கள்: உறுப்பினா்கள் கோரிக்கை

நாக்பூா்தீக்ஷா பூமியில் தம்மசக்கர பரிவா்தன விழா: புனித பயணம் சென்று திரும்பியோா் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

வடமாநில இளைஞா் தற்கொலை

மருதாடு ஸ்ரீமருத மாரியம்மன் கோயில் கூழ்வாா்த்தல் விழா

கொடைக்கானலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT