புதுச்சேரியில் அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000: முதல்வர்
அரசு விழாவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேச்சு...
புதுச்சேரியில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 1,000 உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச மனை பட்டா வழங்கும் விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி இன்று பங்கேற்றார்.
நாட்டில் முதல்முறையாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 800 சதுர அடியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச மனைப்பட்டாவை முதல்வர் என்.ரங்கசாமி திங்கள்கிழமை வழங்கினார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக விழாவில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
தற்போது புதுச்சேரியில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தலைவிகளுக்கு மட்டும் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ. 1,000 வழங்கப்படும் என்றும் விரைவில் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அடுத்தாண்டு தமிழ்நாட்டுடன் புதுச்சேரிக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Chief Minister Rangasamy has announced that a monthly allowance of Rs. 1,000 will soon be provided to all heads of households in Puducherry.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.