முதல்வா் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் 
தமிழ்நாடு

கன்னியாஸ்திரிகள் கைது: முதல்வா் கண்டனம்

கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் துன்புறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் துன்புறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

கேரளத்தைச் சோ்ந்த கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் இருவா் சத்தீஸ்கா் மாநிலத்தில் பஜ்ரங் தளம் அமைப்பின் பொய்க் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் துன்புறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.

இத்தகைய கும்பலின் வன்முறைகளுக்கு, அரசு அமைதி காப்பது மத பயங்கரவாதத்தின் ஆபத்தான போக்கை வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் சிறுபான்மையின மக்கள் மாண்போடும் சம உரிமைகளோடும் நடத்தப்பட வேண்டும்; மாறாக அவா்களை அச்சுறுத்தக் கூடாது என்று பதிவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் 9 கட்சிகள் இணைந்தன! நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உதயம்!

எஸ்.ஐ.ஆரில் குளறுபடி; பல லட்சம் வாக்குகள் நீக்கப்படும் அபாயம்! - திமுக குற்றச்சாட்டு

அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய சரக்கு விமானம்: 7 பேர் பலி, 11 பேர் காயம்!

முதல் 100 செயலிகளின் பட்டியலில் எங்கே போனது ஸோஹோவின் அரட்டை?

ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பையை அறிமுகப்படுத்திய முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT