மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலையை முறையாக வழங்கக் கோரி, விழுப்புர மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் வல்லம், மேல்மலையனூர், முகையூர் திருவெண்ணெய்நல்லூர் ஆகிய ஒன்றியங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக 100 நாள் வேலை வழங்கப்படுவதில்லை.
இது குறித்து அலுவலர்களிடம் கேட்டால் உரிய பதிலும் தெரிவிப்பதில்லை, எனவே தங்களுக்கு அரசு அறிவித்துள்ளவாறு 100 நாள் வேலையை வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.