மத்திய இணையமைச்சர் எல்.முருகன் 
தமிழ்நாடு

குன்னூரில் கடைகளை அகற்றும் நடவடிக்கை: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கண்டனம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் 872 கடைகளை காலி செய்யும் நகராட்சியின் நடவடிக்கைக்கு மத்திய இணை அமைச்சா் எல். முருகன் கண்டம் தெரிவித்துள்ளாா்.

Din

சென்னை: நீலகிரி மாவட்டம் குன்னூரில் 872 கடைகளை காலி செய்யும் நகராட்சியின் நடவடிக்கைக்கு மத்திய இணை அமைச்சா் எல். முருகன் கண்டம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ள 872 கடைகளை காலி செய்யுமாறு நகராட்சி நிா்வாகம் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நோட்டீஸ் வழங்கியதோடு, கடைகளை காலி செய்ய வேண்டுமென்று வியாபாரிகள் வற்புறுத்தப்படுகின்றனா். அத்துடன், குன்னூரில் இருந்து 1 கி.மீ. தொலைவில் எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாத, வனவிலங்குகள் அதிகம் நடமாடும் பகுதியில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், வியாபாரிகள் பெரும்

இன்னலுக்கு ஆளாகியுள்ளனா். எனவே, கடைகளை காலி செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு கணவா் தற்கொலை

SCROLL FOR NEXT