X
தமிழ்நாடு

மெரீனாவில் அதிவேகமாக கார் ஓட்டிய விவகாரம்: 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

மெரீனாவில் அதிவேகமாக கார் ஓட்டிய விவகாரத்தில் வழக்குப்பதிவு பற்றி...

DIN

சென்னை மெரீனா கடற்கரை சாலையில் அதிவேகமாக கார் ஓட்டிய விவகாரத்தில் காரை இயக்கிய அபிஷேக் என்பவரின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெரீனா கடற்கரை சாலையில் நேற்று(வெள்ளிக்கிழமை) காவலர் ஒருவர் மீது காரை ஏற்றுவதுபோல போக்கு காட்டி அதிவேகமாக கார் ஓட்டிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவலர் செல்வம் அளித்த புகாரில் காரை ஓட்டிய அபிஷேக், அவரது மனைவி நந்தினி மற்றும் மற்றொரு நண்பர் ஆகிய மூவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். தான் நன்றாக கார் ஓட்டுவதாக மனைவி கூறியதால் அவ்வாறு கார் ஓட்டியுள்ளதாக அபிஷேக் தெரிவித்துள்ளார். இவர்கள் மூவரும் ஐடி ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மயிலாப்பூரைச் சேர்ந்த அபிஷேக் (25) மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் பின்பு ஜாமீனில் அவரை காவல்துறையினர் விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனைத்தையும் சொந்தம் கொண்டாட நினைக்கிறது பாஜக: அகிலேஷ் யாதவ்

குஜராத்தில் பிரதமர் மோடி சாலைவலம்: ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு!

யோலோ டீசர்!

மோடியின் பட்டப்படிப்பு விவகாரம்: உத்தரவை ரத்து செய்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பு!

குடியரசுத் தலைவருடன் ஃபிஜி பிரதமர் சந்திப்பு!

SCROLL FOR NEXT