சென்னை சென்ட்ரலில் இருந்து புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், திருவள்ளூர் மார்க்கம் செல்லும் புறநகர் ரயில்கள் சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் தாமதம் எனக் கூறப்படுகிறது.
இதனால் பணி முடிந்து வீடுகளுக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
ஆத்திரமடைந்த பயணிகள் அதிகாரிகளுடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே சிக்னல் கோளாறு காரணமாக இந்த ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.
சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு மற்றும் சென்னை சென்ட்ரல் – ஆவடி – திருவள்ளூர் வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.