சென்னையில் மகளிர் விடியல் மாநகரப் பேருந்தில் பயணித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
திராவிட முன்னேற்றக் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நான்காம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்ள சென்றார்.
அப்போது, சென்னை மாநகர அரசுப் பேருந்துகளில் ஏறி மக்களிடமும் ஓட்டுநர், நடந்துனரிடமும் முதல்வர் ஸ்டாலின் குறைகளைக் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, தமிழக அரசு இயக்கும் மகளிர் இலவசப் பேருந்தான மகளிர் விடியல் பேருந்தில் ஏறி, மக்களோடு பயணம் செய்தார்.
இந்த நிகழ்வின்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.