தமிழ்நாடு

பாபநாசத்தில் சூறைக் காற்றுடன் பெய்த கனமழை!

பாபநாசம் பகுதிகள் சூறைக் காற்றுடன் கனமழை பெய்ததால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.

DIN

பாபநாசம் பகுதிகள் சூறைக் காற்றுடன் கனமழை பெய்ததால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கணபதி அக்ரஹாரம், பட்டுக்குடி, மணலூர் இலுப்பக்கோரை, மாகாளிபுரம், தேவன்குடி, சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் சுமார் 100-ஏக்கருக்கு மேல் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். இந்தநிலையில் பாபநாசம் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் கூடிய பலத்த கனமழை பெய்தது.

இதனால் சாகுபடி செய்துள்ள வாழைத் தார்களுடன் கூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முழுவதும் சூறைக்காற்றினால் கீழே சாய்ந்து விழுந்து பாதிப்புக்குள்ளானது. இதனால் பிஞ்சு தருவாயில் உள்ள வாழை காய்கள் மற்றும் ஒரு மாதத்திற்குப் பிறகு அறுவடை செய்ய வேண்டிய வாழைத்தார்களும் கீழே விழுந்து சேதமாகின.

தற்போது சூறைக்காற்றுடன் பெய்த கனமழையினால் வாழைத்தார்கள் கீழே சாய்ந்துள்ளதால், முற்றிலும் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கீழே சாய்ந்து கிடக்கும் வாழை மரங்கள் மற்றும் வாழைத்தார்களைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT