முகப்பு
யாஸ் புயல் 12 மணி நேரத்தில் தீவிர புயலாக கரையைக் கடக்கும்
தமிழ்நாடு

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும்

தமிழ்நாடு

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும்

Updated On : 21 மே, 2025 at 6:39 AM
யாஸ் புயல் 12 மணி நேரத்தில் தீவிர புயலாக கரையைக் கடக்கும்
பகிர்:

அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரம், வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தெற்கு கர்நாடக உள்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறும். பின்னர் வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக் கூடும்.

மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என்று கணித்துள்ளது.

இதன் காரணமாக 5 நாள்களுக்கு மழை பெய்யும். தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருவதால், சுட்டெரித்த வெய்யிலின் தாக்கத்தைக் குறைத்துள்ளது.

இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

முழு கட்டுரையைப் படிக்க →