குலசை தசரா: இன்று சூரசம்ஹாரம்!
குலசேகரப்பட்டினத்தில் தசரா விழாவில் இன்று இரவு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.
குலசேகரப்பட்டினத்தில் தசரா கொண்டாட்டத்தின் கடைசி நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று இரவு நடைபெறவுள்ளது.
தசரா விழாக் கொண்டாட்டத்தில், மைசூருக்கு அடுத்ததாக குலசேகரப்பட்டினம்தான். திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள குலசேகரப்பட்டினத்தில் தசரா விழாவைக் காண, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்பட வட மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதருவர்.
10 நாள்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் இந்த விழா நிகழ்ச்சிகளில் காளி, அம்மன், சிவன், பார்வதி, முருகன், அரக்கர், குரங்கு, தாடகை, குறவன் - குறத்தி போன்று பல வண்ணமிகு வேடங்களை அணிந்துகொண்டு ஊர்வலமாகச் செல்வது வழக்கம்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் தசரா திருவிழாவின் கடைசி நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் 10 ஆம் திருவிழாவான இன்று (வியாழக்கிழமை) கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இதனையடுத்து, இன்று காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெறுகின்றன. இரவு 11 மணிக்கு அடுத்ததாக சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்று, இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Kulasai Dasara Soorasamharam today
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.