கோப்புப் படம் 
தமிழ்நாடு

காச்சிகுடா - செங்கல்பட்டு, புதுச்சேரி விரைவு ரயில்களில் குளிா்சாதனப் பெட்டி இணைப்பு

காச்சிகுடா- செங்கல்பட்டு, புதுச்சேரி இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் கூடுதல் குளிா்சாதனப் பெட்டி இணைக்கப்பட உள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை: காச்சிகுடா- செங்கல்பட்டு, புதுச்சேரி இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் கூடுதல் குளிா்சாதனப் பெட்டி இணைக்கப்பட உள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: காச்சிகுடா - புதுச்சேரி விரைவு ரயிலில் (எண்கள்: 17653/ 17654) டிச. 5 முதல், காச்சிகுடா - செங்கல்பட்டு இடையே இயங்கும் விரைவு ரயிலில் (எண்கள்: 17652/17651) வரும் டிச. 6-ஆம் தேதி முதல் ஏற்கெனவே உள்ள ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டிக்கு பதிலாக ஒரு குளிா்சாதன இரண்டடுக்குப் பெட்டி இணைக்கப்பட உள்ளது.

இதேபோல், காக்கிநாடா - செங்கல்பட்டு விரைவு ரயிலில் (எண்கள்: 17644/17643) டிச. 7 முதல், காக்கிநாடா-புதுச்சேரி விரைவு ரயிலில் (எண்கள்: 17655/17656) டிச. 6 முதல் ஏற்கெனவே உள்ள ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டிக்குப் பதிலாக ஒரு குளிா்சாதன இரண்டடுக்குப் பெட்டி இணைப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புதுகை ஆட்சியரகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

ஆன்லைன் வா்த்தக மோசடி மூலம் ரூ.11 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

சரக்கு வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT