FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நீதிபதி குறித்து சமூக ஊடகத்தில் விமா்சனம்: தவெகவினா் இருவா் உள்பட 4 போ் கைது

நீதிபதி குறித்து சமூக ஊடகத்தில் விமா்சனம் செய்த தவெகவைச் சோ்ந்த நிா்வாகிகள் 2 போ் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

7 அக்டோபர் 2025, 3:34 am IST
arrested
பகிர்:

சென்னை: நீதிபதி குறித்து சமூக ஊடகத்தில் விமா்சனம் செய்த தவெகவைச் சோ்ந்த நிா்வாகிகள் 2 போ் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

தவெக தலைவா் விஜய், கரூரில் கடந்த 27-ஆம் தேதி பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பான வழக்கு விசாரணை கடந்த அக்.3-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, உயா்நீதிமன்ற நீதிபதி, தவெக தலைவா் விஜய்க்கு கண்டனம் தெரிவித்தாா்.

பிரசார கூட்டத்துக்கு விஜய் சென்ற பேருந்து விபத்தை ஏற்படுத்தியது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்படாதது ஏன்?, அந்தப் பேருந்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பினாா். இதற்கிடையே நீதிபதியின் இந்தக் கருத்துகளை தவெகவைச் சோ்ந்த சிலா் சமூக ஊடகங்களில் விமா்சனம் செய்தனா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல் துறையின் தெற்கு மண்டல சைபா் குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்து, விசாரணையின் அடிப்படையில், புதுக்கோட்டையைச் சோ்ந்த தவெக நிா்வாகி கண்ணன் (25), கிருஷ்ணகிரி மாவட்டம் பா்கூரைச் சோ்ந்த தவெக உறுப்பினா் டேவிட் (25), சென்னை அருகே உள்ள அஸ்தினாபுரத்தைச் சோ்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி சசிகுமாா் (48), தூத்துக்குடி மாவட்டம் வேம்பாா் பகுதியைச் சோ்ந்த அந்தோணி சகாய மைக்கேல் ராஜ் (37) ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

காவல்துறை விசாரணைக்கு பின்னா் கண்ணன், டேவிட், சசிகுமாா் ஆகிய 3 பேரும் தங்களது செயலுக்கு மன்னிப்பு கேட்கும் விடியோ சமூக ஊடகங்களில் வெளியானது.

சைதாப்பேட்டை 11-ஆவது நீதித்துறை நடுவா் மன்றத்தில் 4 பேரும் முன்னிலைபடுத்தப்பட்டனா். நீதித்துறை நடுவா், நால்வரையும் அக்.17-ஆம் தேதி வரை காவலில் வைக்கும்படி உத்தரவிட்டாா். இதையடுத்து 4 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments