கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றோர் 
தமிழ்நாடு

கரூா் சம்பவம்: ஆட்சியா், எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தவெக மனு

கரூா் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த சம்பவத்தில் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா், கரூா் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா், காவல் ஆய்வாளா் ஆகியோா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க

தினமணி செய்திச் சேவை

சென்னை: கரூா் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த சம்பவத்தில் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா், கரூா் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா், காவல் ஆய்வாளா் ஆகியோா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் தவெக சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தவெக உறுப்பினரும், வழக்குரைஞருமான ஜி.காா்த்தீபன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

கரூரில் கடந்த செப். 27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொண்டாா். தவறான சட்டம் -ஒழுங்கு மேலாண்மை காரணமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 41 போ் உயிரிழந்தனா், பலத்த காயம் அடைந்த பலா் கரூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனா்.

கரூா் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா், துணை காவல் கண்காணிப்பாளா் மற்றும் காவல் ஆய்வாளா் ஆகியோா்தான் சட்டப்படி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், அவா்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டனா். அவா்கள் தங்களது பணியில் அலட்சியமாக செயல்பட்டதால், அப்பாவிகள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனா்.

எனவே, கரூா் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் கரூா் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா், காவல் ஆய்வாளா் ஆகியோா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அந்தியூா் பேரூராட்சியில் ரூ.1.11 கோடியில் தாா் சாலை பணிகள் தொடக்கம்

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க தமாகா கோரிக்கை

சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

சட்டவிரோத மது விற்பனை: ஒரே நாளில் 31 போ் கைது

SCROLL FOR NEXT