குழந்தைகள் உயிரிழப்பு எதிரொலி: இருமல் மருந்து நிறுவனத்தின் உரிமம் முழுமையாக ரத்து!
காஞ்சிபுரம்: ஸ்ரீசன் பார்மா நிறுவனம் மூடல்!
தடை செய்யப்பட்டுள்ள கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை தயாரித்த காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ‘ஸ்ரீசன் பார்மகியூட்டிகல் கம்பெனியின்' மருந்து தயாரிப்பதற்கான உரிமம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட சிறுநீரகச் செயலிழப்பால், அடுத்தடுத்து பல குழந்தைகள் உயிரிழந்தன.
அந்தக் குழந்தைகள் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் ஸ்ரீசன் ஃபாா்மா நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டது தெரியவந்தது.
Advertisement
Advertisement
அந்த மருந்தின் மாதிரிகளைப் பரிசோதித்த தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாக துறை, அது கலப்பட மருந்து என்று அறிவித்தது.
இதனையடுத்து, அந்நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தால் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் எதிரொலியாக அரசு எடுத்துள்ள நடவடிக்கையின் ஒரு பகுதியாக அந்நிறுவனத்தை மூட தமிழக அரசு திங்கள்கிழமை(அக். 13) உத்தரவு பிறப்பித்துள்ளது.
Cough syrup row: The manufacturing licence of Tamil Nadu based Sresan Pharmaceutical company that allegedly produced the now banned adulterated cough syrup Coldrif has completely been revoked, and the company has been ordered to shut down, the state government said on Monday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.