சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள பழமையான விக்டோரியா பொது அரங்கு புணரமைப்புப் பணிகளை 2 வாரங்களில் முடிக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஆங்கிலேய ஆட்சியில் கடந்த 1890 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது விக்டோரியா பொது அரங்கம். தொன்மையான இந்த அரங்கை பழமை மாறாமல் புதுப்பித்து புணரமைக்கும் பணி மற்றும் பூங்கா அமைக்கும் பணி சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் ரூ.32.62 கோடியில் நடைபெற்றுவருகிறது.
பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதை அடுத்து, நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு விக்டோரியா பொது அரங்கப் பணிகளை வெள்ளிக்கிழமை மாலை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பணிகளை 2 வாரத்துக்குள் முடிக்கவேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.
அத்துடன் புதிய மாநகராட்சி கூட்டரங்கம் கட்டுவதற்காக பழைய கட்டடங்கள் இடிக்கும் பணியையும் அவா் பாா்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
ஆய்வின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளா்ச்சிக்குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு, மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, துணைமேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.