FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முன்பதிவு குறைவு: 6 சிறப்பு ரயில்கள் ரத்து!

அக். 22 - 29 தேதி வரை இயக்கப்பட இருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது தொடர்பாக...

20 அக்டோபர் 2025, 2:54 pm IST
ரயில் - (கோப்புப்படம்)
பகிர்:

முன்பதிவு குறைவாக இருப்பதால், அக். 22 - 29 தேதி வரை இயக்கப்பட இருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

வரும் அக். 22 ஆம் தேதி பிற்பகல் 3.10 மணிக்கு இயக்கப்படவிருந்த சென்னை சென்ட்ரல் - கோட்டடையம் (06121) சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

வரும் அக். 23 ஆம் தேதி பிற்பகல் 2.05 மணிக்கு இயக்கப்படவிருந்த கோட்டடையம் - சென்னை சென்ட்ரல் (06122) சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வரும் அக், 24, 26 தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு செங்கல்பட்டு - நெல்லை (06153) இடையே இயக்கப்படவிருந்த அதிவிரைவு சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வரும் அக், 24, 26 தேதிகளில் அதிகாலை 4 மணிக்கு நெல்லை- செங்கல்பட்டு (06154) இடையே இயக்கப்படவிருந்த அதிவிரைவு சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வரும் அக். 28 ஆம் தேதி காலை 9.15 மணிக்கு நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் (06054) இடையே இயக்கப்படவிருந்த சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வரும் அக். 29 ஆம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் (06053) இடையே இயக்கப்படவிருந்த சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

summary

Due to low bookings, Southern Railway has announced that 6 special trains scheduled to run from Oct. 22 - 29 will be cancelled.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments