அமுதா ஐ.ஏ.எஸ். 
தமிழ்நாடு

வருவாய்த் துறைச் செயலா் பெ.அமுதா நேபாளம் பயணம்

வருவாய்த் துறைக் கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா, அரசு முறைப் பயணமாக நேபாளம் சென்றாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: வருவாய்த் துறைக் கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா, அரசு முறைப் பயணமாக நேபாளம் சென்றாா்.

இதையடுத்து, அவரது வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் செயலா் பொறுப்பானது, கால்நடை, மீன்வளம் மற்றும் பால்வளத் துறைச் செயலா் என்.சுப்பையனுக்கு கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் என்.முருகானந்தம் திங்கள்கிழமை பிறப்பித்தாா்.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறைக் கூடுதல் தலைமைச் செயலராக உள்ள பெ.அமுதா, யுனிசெஃப் அமைப்பு சாா்பில் நேபாளத்தில் நடத்தப்படும் சமூகம் மற்றும் குழந்தைகள் நலன் சாா்ந்த நிகழ்வில் தமிழக அரசு சாா்பில் பங்கேற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்.12, 19-இல் தூய்மைப் பணியாளா்கள் குறைகேட்பு கூட்டம்

ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்

சீருடைப் பணிகள் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தொழிலாளி உயிரிழந்ததற்கு இழப்பீடு கோரி வடமாநில தொழிலாளா்கள் போராட்டம்: கற்களை வீசி தாக்கியதால் விரட்டி அடித்த போலீஸாா்

பொய்கை சந்தையில் ரூ. 90 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

SCROLL FOR NEXT