முகப்பு
தமிழ்நாடு

அறநிலையத் துறை நிதியில் திருமணங்கள்! இபிஎஸ் மீது துணை முதல்வர் உதயநிதி விமர்சனம்!

அறநிலையத் துறையின் நிதிப் பயன்பாடு குறித்து எடப்பாடி பழனிசாமியை குறித்து உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

Updated On : 14 செப்டம்பர், 2025 at 11:47 AM
பகிர்:
Updated On : 14 செப்டம்பர், 2025 at 11:31 AM

அறநிலையத் துறையின் நிதியைப் பயன்படுத்துவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்புவது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துப் பேசினார்.

சென்னையில் அறநிலையத் துறை சார்பில் 32 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைக்கும் நிகழ்ச்சி, சென்னை கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,

Advertisement

``சென்னை கொளத்தூர், திருச்செங்கோடு, ஒட்டன்சத்திரம், விளாத்திக்குளம் ஆகிய இடங்களில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

Updated On : 14 செப்டம்பர், 2025 at 11:34 AM
- X | Udhayanidhi Stalin

ஏழை, எளிய பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று கல்லூரிகளைத் திறந்தால், கோயில் நிதியில் ஏன் கல்லூரியைத் திறக்கிறீர்கள் என்று எடப்பாடி பழனிசாமி கேட்கிறார்.

அறநிலையத் துறையின் நிதியை, குழந்தைகளின் கல்விக்குப் பயன்படுத்தக் கூடாது; அது எப்படி நியாயம்? என்றும் கேட்கிறார்.

ஆனால், அறநிலையத் துறையின் பணம் - மக்களுக்குத் தான் சொந்தம் என்றும், கல்விக்குப் பயன்படுத்தலாம் என்றும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

இன்று, அறநிலையத் துறையின் சார்பில் திருமணங்கள் நடைபெறுகின்றன. இதிலும், அறநிலையத் துறை நிதியை எப்படி திருமணங்களுக்குப் பயன்படுத்துவீர்கள் என்று கேட்பார்போல'' என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: திருச்சிக்கு திட்டங்கள் இல்லை! விஜய்யின் குற்றச்சாட்டுக்கு அன்பில் மகேஸ் மறுப்பு!

summary

DCM Udhayanidhi Stalin criticises ADMK Secretary Edappadi Palaniswami

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.