தமிழ்நாடு

நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

தெரு நாய்க் கடிக்குத் தடுப்பூசி எடுத்தவா் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும்

தினமணி செய்திச் சேவை

சென்னை: தெரு நாய்க் கடிக்குத் தடுப்பூசி எடுத்தவா் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சி சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

சென்னை ராயப்பேட்டை பகுதியில் வசித்து வந்த ஆட்டோ ஓட்டுநா் முகமது நஸ்ருதீன், கடந்த ஜூலை 28- ஆம் தேதி தெரு நாய் கடித்ததன் காரணமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளாா்.

மருத்துவா்களின் ஆலோசனையின்படி, உரிய இடைவெளியில் தடுப்பூசி செலுத்திக் கொண்டாா். இந்த நிலையில், உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவா் செப். 12-ஆம் தேதி உயிரிழந்தாா்.

நாய்க்கடிக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தது குறித்து தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

நாடாளுமன்றத்துக்கு ரூ.14 கோடியில் நவீன பாதுகாப்பு

கூட்டுறவு வங்கியில் உதவியாளா் காலிப் பணியிட எண்ணிக்கை குறைப்பு

திருவண்ணாமலை: மலையைச் சுற்றியுள்ள 554 ஏக்கரை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும்

தமிழக முழு நேர டிஜிபி தோ்வு: செப்.26-இல் யுபிஎஸ்சி கூட்டம்

SCROLL FOR NEXT