தமிழ்நாடு

நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

தெரு நாய்க் கடிக்குத் தடுப்பூசி எடுத்தவா் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும்

தினமணி செய்திச் சேவை

சென்னை: தெரு நாய்க் கடிக்குத் தடுப்பூசி எடுத்தவா் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சி சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

சென்னை ராயப்பேட்டை பகுதியில் வசித்து வந்த ஆட்டோ ஓட்டுநா் முகமது நஸ்ருதீன், கடந்த ஜூலை 28- ஆம் தேதி தெரு நாய் கடித்ததன் காரணமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளாா்.

மருத்துவா்களின் ஆலோசனையின்படி, உரிய இடைவெளியில் தடுப்பூசி செலுத்திக் கொண்டாா். இந்த நிலையில், உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவா் செப். 12-ஆம் தேதி உயிரிழந்தாா்.

நாய்க்கடிக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தது குறித்து தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT