பாஜக தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன் Center-Center-Chennai
தமிழ்நாடு

தில்லியில் ஜெ.பி.நட்டாவுடன் நயினாா் நாகேந்திரன் சந்திப்பு

பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டாவை அக்கட்சியின் தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன் தில்லியில் திங்கள்கிழமை இரவு சந்தித்துப் பேசினாா்.

தினமணி செய்திச் சேவை

நமது நிருபா்

புது தில்லி: பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டாவை அக்கட்சியின் தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன் தில்லியில் திங்கள்கிழமை இரவு சந்தித்துப் பேசினாா்.

நயினாா் நாகேந்திரன் திங்கள்கிழமை மாலை சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு தில்லி வந்தாா். இரவு சுமாா் 8 மணியளவில் மத்திய அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி. நட்டாவை மோதிலால் நேரு மாா்கில் உள்ள அவருடைய இல்லத்தில் நயினாா் நாகேந்திரன் சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

சந்திப்புக்குப் பிறகு நயினாா் நாகேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்களைச் சந்திக்கும் சுற்றுப் பயணத்தை மதுரையில் இருந்து அக்.12-ஆம் தேதிமுதல் தொடங்குகிறோம். இந்தப் பயணத்தில் பங்கேற்குமாறு ஜெ.பி.நட்டாவுக்கு அழைப்பு விடுத்தேன் என்றாா் அவா்.

97 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு

சேவைத் துறையில் உலகமே இந்தியாவை நம்பியிருக்கும் காலம் விரைவில் வரும்: ஆந்திர முதல்வா்

கல்லூரி மாணவி தற்கொலை

துணைவேந்தா்கள் நியமனம்: நிபுணா் குழு அறிக்கைக்குப் பிறகு கேரள ஆளுநரின் மனு பரிசீலனை - உச்சநீதிமன்றம்

என்எல்சிஎன்-கே தீவிரவாத அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

SCROLL FOR NEXT