முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள்! - முதல்வர் பெருமிதம்!

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு பற்றி....

Updated On : 27 செப்டம்பர் 2025, 5:01 pm IST
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் - கோப்புப்படம்
பகிர்:

2021ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் ஆண்டுக்கு 12.5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக நாட்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் சுமார் 10% ஆகும். கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து மொத்தமாக 52 லட்சத்திற்கும் அதிகமானோர் இபிஎஃப்ஓ-வில் பதிவு செய்துள்ளனர் என்றும் கூறியுள்ளது.

Advertisement

Advertisement

அதாவது 2021ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபிறகு 4 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"தொழில் வளர்ச்சியின் மிகச் சிறந்த குறியீடு வேலைவாய்ப்பை உருவாக்குவதுதான். அந்த வகையில், 2021-ஆம் ஆண்டு திருச்சியில் நான் உறுதியளித்த அளவான ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் என்பதையும் தாண்டி ஆண்டுக்கு 12.5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது திமுக அரசு.

நமது ஓட்டம் இன்னும் வேகமாகத் தொடரும்!" என்று பதிவிட்டுள்ளார்.

summary

TN chief minister MK stalin says 12.5 lakh jobs created annually in Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments