தொல். திருமாவளவன் DIN
தமிழ்நாடு

கரூர் பலி: அரசியல் விளையாட்டைத் தொடங்கிவிட்டது பாஜக! - திருமாவளவன்

கரூர் நெரிசல் விவகாரத்தில் பாஜக குழு தமிழகம் வந்துள்ளது பற்றி திருமாவளவன் கருத்து...

இணையதளச் செய்திப் பிரிவு

கரூா் கொடுந்துயரத்தில் பாஜக தனது அரசியல் விளையாட்டை தொடங்கியுள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 41 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் குறித்து ஆய்வு செய்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய பாஜக எம்.பி. ஹேமமாலினி தலைமையிலான குழு செவ்வாயக்கிழமை கரூா் வந்தது. அந்தக் குழு கரூரில் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் தெரிவித்து சம்பவம் தொடா்பாக விசாரணை நத்தியது.

கரூா் கொடுந்துயரத்தில் பாஜக தனது அரசியல் விளையாட்டை தொடங்கியுள்ளது. கரூரில் நடந்த கொடூரத்தைப் பற்றி ‘உண்மை கண்டறியும் குழுவை’ அமைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது.

இந்த நிலையில், காங்கிரஸ் பேரியக்கமும் உடனடியாக இதுபோன்ற உண்மை கண்டறியும் குழுவை நியமித்து கரூருக்கு அனுப்பிவைக்க வேண்டும். பாஜகவின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடி தேவையாகவுள்ளது.

மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி இதுதொடா்பாக தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களைச் சாா்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்களைக் கொண்ட குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்றாா் அவா்.

VCK leader Thirumavalavan says that BJP has started a political game in Karur stampede issue

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரான் வெளியுறவு அமைச்சருடன் எஸ். ஜெய்சங்கர் பேச்சு!

ஜார்க்கண்ட்டில் வெடி விபத்து : 3 பேர் பலி, இருவர் படுகாயம்

மஹிந்திரா எக்ஸ்யூவி - 7எக்ஸ்ஓ மற்றும் எக்ஸ்இவி - 9எஸ் காரின் முன்பதிவு தொடங்கியது!

"சென்னை சங்கமம்”! பறை இசைத்து தொடக்கிவைத்த முதல்வர்! | DMK

பொங்கல் வாழ்த்து தெரிவித்த குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்!

SCROLL FOR NEXT