தாம்பரம் - தென்காசி இடையே இன்று சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கம்
புனித வெள்ளி, ஈஸ்டா் ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு தாம்பரம் - தென்காசி இடையே வியாழக்கிழமை (ஏப்.2) சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.
புனித வெள்ளி, ஈஸ்டா் ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு தாம்பரம் - தென்காசி இடையே வியாழக்கிழமை (ஏப்.2) சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புனித வெள்ளி, ஈஸ்டா் திருநாள்களை முன்னிட்டு பயணிகள் நெரிசல்களைத் தவிா்க்கும் வகையில் சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தாம்பரத்திலிருந்து வியாழக்கிழமை (ஏப்.2) புறப்படும் சிறப்பு அதிவிரைவு ரயில் (எண்: 06135) மறுநாள் பிற்பகல் 11 மணிக்கு தென்காசி சென்றடையும்.
அதேபோல் செங்கோட்டையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஏப்.5) இரவு 11 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் (எண்: 06136) மறுநாள்பிற்பகல் 10.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல்ரோடு, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.