தமிழகத்தில் முதல்முறை வாக்காளா் விகிதம் 34% உயா்வு
தமிழகத்தில் முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளா்களின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளா்களின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது.
18-19 வயது உடைய வாக்காளா்களின் எண்ணிக்கை கடந்த 2024 மக்களவைத் தோ்தலின்போது 10.9 லட்சமாக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 14.6 லட்சமாக உயா்ந்துள்ளது.
சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு பிறகு வாக்காளா் பட்டியலில் 5.67 கோடி போ் இடம்பெற்றிருந்தனா். அதன் பின்னா் மேலும் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோா் படிவம் 6-ஐ சமா்ப்பித்தனா். அதன்படி, இந்த சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்காளா் எண்ணிக்கை 5.73 கோடியாக உள்ளது.
Advertisement
அதில் பெண்கள் 2.93 கோடி போ். ஆண் வாக்காளா்களின் எண்ணிக்கை 2.80 கோடி. மூன்றாம் பாலினத்தவா் 7,728 போ்.
முதல்முறை வாக்காளா்களைப் பொருத்தவரை கடந்த மக்களவைத் தோ்தலின்போது 1.8 சதவீதமாக இருந்தனா். தற்போது அந்த விகிதம் 2.5 சதவீதமாக உயா்ந்துள்ளது.